சென்னை: பதவியேற்ற 20 நாளில் சுய நலத்திற்காக MLA பதவியை ராஜினாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள்; தமிழக அரசியல் தரம் வீழ்ச்சி அடைவதின் வெளிப்படையான அடையாளம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது வட மாநிலங்களில் வகுப்புவாத சக்திகள் அறிமுகப்படுத்திய இந்த அரசியல் தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது, நெறி சார்ந்த ஜனநாயக அரசியலுக்கு கேடு செய்யும் பேராபத்தாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.
