×

சின்னாளபட்டியில் கிடப்பில் கிடக்கும் சாலை பணி மக்கள் அவதி

சின்னாளபட்டி, மார்ச் 4: சின்னாளபட்டி பேரூராட்சி 2வது வார்டு பாரதிநகரில் அரசு சமுதாய நல மருத்துவமனை சாலை, பாரதிநகர் விநாயகர் கோயில் தெரு மற்றும் 3வது வார்டு திருவிக நகர் ஆகிய பகுதிகளில் ரூ. 40 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழைய சாலைகள் பொக்லைன் மூலம் பெயர்த்து அகற்றப்பட்டது. ஆனால் அதன்பின் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கின்றன.

இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...