கர்நாடக: யானைகள் மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உயிரிழந்த நிகழ்வை அடுத்து, வன விலங்கு சரணாலயங்களில் திறந்தவெளி வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. திறந்தவெளி வாகனங்களில் உடையாத கண்ணாடிகள், இரும்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும், அவசர காலங்களில் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
