சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘5 மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்தியது ஏற்கத்தக்கதல்ல. பெட்ரோல் விலை உயர்வு ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
