ஜெய்ப்பூர்: பிரபல பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் காலமானார். ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அவருடைய பூர்வீகம். அங்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதன் அடிப்படையில் தனது பூர்வீக ஊரான உதய்பூருக்கு சென்றபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் ஆர்.பி.சவுத்ரி. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சௌத்ரி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார் ஆர்.பி.சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சவுத்ரி. ராஜஸ்தானில் விபத்தில் உயிரிழந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது. திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
