டெல்லி: மே.வங்கத்தில் வாக்கு எண்ணும் மைய பார்வையாளர்களாக ஒன்றிய அரசு ஊழியர்களை நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டும் பார்வையாளர்களாக தேர்தல் அதிகாரி நியமனம் செய்துள்ளார். ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டுமே பார்வையாளர்களாக நியமித்ததை ஏற்க முடியாது என மே.வங்க அரசு கூறியுள்ளது. மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
