×

நீட் நுழைவுத் தேர்வு; மாணவர்கள் மனநல ஆலோசனை பெற உதவி எண்கள் அறிவிப்பு!

 

சென்னை: மாணவர்களின் மன உறுதி மற்றும் மனதலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2026 – 2027-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடைபெறும் தேர்வை 22.80 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104-ஐ அழைக்கவும். மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வருகின்ற 3.4.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, டெலி கவுன்சிலிங் (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14116 அல்லது 101 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : NEET ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் வரும் 5ம் தேதி வரை...