×

ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்கம் தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருச்சுழி, பிப்.26: நரிக்குடி அருகே சுள்ளங்குடியில் புதிய கலையரங்கத்தை தங்கம்தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார். நரிக்குடி அருகே உள்ள சுள்ளங்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலையரங்க கட்டிடத்தை தங்கம் தென்னரசு எம்எல்ஏ திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் போஸ்தேவர், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ் ஜோசப், சிங்கராஜ் மற்றும் பாப்பாங்குளம் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thangamtennarasu ,MLA ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...