×

பாவேந்தர் பாரதிதாசன் தமிழர் உயர்வுக்கான வழியை கவிதையால் காட்டியவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தமிழரின் உயர்வுக்கான வழியை கவிதையால் காட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே. தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Pavendar Bharathidasan ,Chennai ,DMK ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து