×

நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பாஜ முடித்து விட்டது: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கருத்து

பாட்னா: ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பாஜ முடித்து விட்டதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் பேரவையில் நேற்று முதல்வர் சாம்ராட் சவுத்ரி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் செயல் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “நிதிஷ் குமார் முதல்வராக நீடிக்க பாஜ விடாது என்பது எங்களுக்கு முன்பே தெரியும். நிதிஷ் குமார் 2030 வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருப்பார் என பாஜ கூறி வந்தது. ஆனால் தற்போது அவரை முடித்து விட்டது. எந்தவொரு மாநிலத்துக்கும் அரசியல் ஸ்திரத்தன்மை தேவை. ஆனால், பீகார் மட்டும் தனித்தன்மை வாய்ந்தது. இது ஐந்து ஆண்டுகளில் ஐந்து அரசாங்கங்களை கண்டுள்ளது. லாலு பிரசாத் யாதவின் மாணவரான சாம்ராட் சவுத்ரி முதல்வரானதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், பாஜ, ஆர்எஸ்எஸ்-ல் ஆழமாக வேரூன்றியவர்களிடம் அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Tags : BJP ,Nitish Kumar ,RJD ,Tejashwi Yadav ,Janata Dal ,United ,Bihar Assembly ,Chief Minister ,Samrad Chaudhary government ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...