×

மாசிமக உற்சவம் 6 சைவ திருத்தலங்களில் அழகிய ஓலை சப்பரத்தில் சுவாமி வீதி உலா

கும்பகோணம்,பிப்.23: மாசிமக உற்சவத்தின் ஒருபகுதியாக, ஆறு சைவத்திருத்தலங்களிலும், அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைவண திருத்தலங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெறும். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 17ம் தேதி ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் என ஆறு சைவத்தலங்களில் கொடியேற்றப்பட்டது.

இதேபோல், 18ம் தேதி சக்ரபாணிசுவாமி, ஆதிவராகப்பெருமாள், ராஜகோபாலசுவாமி ஆகிய 3 வைணல தலங்களிலும் கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமிகள் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்று வருகிறது, சைவத்தலங்களில் 5ம் நாளில், ஆதிகும்பபேஸ்வரசுவாமி கோயில், வியாழ சோமேஸ்வரசுவாமி கோயில் மற்றும் காசிவிஸ்வநாதசுவாமி ஆகிய மூன்று தலங்களில் இருந்தும் பஞ்சமூர்த்திகள், பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, நறுமண மலர்கள் மாலைகள் சூடி, அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் எழுந்தருள, திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது. மூன்று கோயில்களில் இருந்தும் வந்த ஓலை சப்பரங்கள் உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்பு அருகே சங்கமித்து பக்தர்களுக்கு ஒரே இடத்தில் இருந்து அருள்பாலித்தனர். இதனை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Masimaka ,
× RELATED மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு...