×

மக்கள் விரோத அதிமுக ஊழல் ஆட்சியை அகற்றிட வேண்டும் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேச்சு

குஜிலியம்பாறை, பிப். 23:  குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது.  கிளை செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது

இதுமட்டுமன்றி சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து வருகிறது. சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரித்து விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வை போல், அனைத்து துறைகளிலும் அதிமுக அரசின் ஊழல் புற்றீசல் போல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அதிமுக ஊழல் ஆட்சியை அகற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜரத்தினம், பாலசுப்பிரமணி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் நன்றி கூறினார்.

Tags : MLA ,Balabharati ,AIADMK ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...