×

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு

சீர்காழி, பிப்.21: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தையல் நாயகி அம்பாள் வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன்கோவில் வணிக நல சங்கத்தின் சார்பில் நகரின் மையப்பகுதியான பேருந்து நிறுத்தம் மற்றும் கடைத் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதனை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா சிசிடிவி ேகமராவை தொடங்கி வைத்தார். பயிற்சி டிஎஸ்பி ஜனனிபிரியா, இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் சேதுபதி, பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பூம்புகார் சங்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர் இதில் வைத்தீஸ்வரன் கோயில் வணிகர் நல சங்க தலைவர் செந்தில்முருகன், பொருளாளர் ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vaitheeswarankoil ,
× RELATED சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கார்த்திகை விழா