×

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கார்த்திகை விழா

சீர்காழி, டிச.18: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இக்கோயிலில் மார்கழி மாத கார்த்திகை விழாவை முன்னிட்டு நேற்று காலை வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்பாள், அங்காரகன், செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்பு செல்வமுத்துக்குமார சுவாமிக்கு தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Karthika festival ,Vaitheeswarankoil ,Sirkazhi ,
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்