ஜெயங்கொண்டம், பிப்.21: ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. உலக காசநோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு நடந்த இந்த விழாவிற்கு அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உஷா தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் கண்ணன், காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கி பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேபிஓலை இமாகுலேட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். ஆய்வக மேற்பார்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.