×

செல்லாண்டி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா குரும்பபாளையத்தில் 24ம் தேதி நடக்கிறது

கோவை, பிப். 21: கோவை மாவட்டம் அன்னூர் அருகே குரும்பபாளையம் பகுதியில் செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வரும் 24ம் தேதி நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜை நிகழ்ச்சி நடக்கும். அதன்பின் காலை 6.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 7 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags : Shrine of Chelandi Amman ,Kurumbalayam ,
× RELATED இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 13 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு