×

வைகை - குண்டாறு நதி இணைப்பு திட்டம் ராமநாதபுரம் மாவட்டம் அதிக பயன்பெறும் அமைச்சர் உதயகுமார் பேட்டி

பரமக்குடி,பிப்.21: வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை கடைக்கோடியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் அதிக பயன் பெறும் என வருவாய் துறை அமைச்சர்  உதயகுமார் தெரிவித்துள்ளார். முதுகுளத்தூரில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வந்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பரமக்குடியில் செய்தியாளரிடம் கூறுகையில், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் காவிரி வைகை குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு தமிழக இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் அதிக பயன் பெறும். கொரோனா மற்றும் சிஏஏ உணர்வு பூர்வமான போராட்ட வழக்குகள், அணுஉலையில் உதயகுமார் தலைமையிலான போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகளை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Ramanathapuram ,District ,Udayakumar ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...