காங்கயம், பிப்.19: மத்திய அரசு அண்மையில் உயர்த்திய பெட்ரோல், டீசல், ஜே.சி.பி. இயந்திரங்களின் உதிரி பாகங்களின் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து காங்கயம்-கரூர் சாலையில் ஜே.சி.பி. வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தினர் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வை வாபஸ் பெறும் வரை காலவரையின்றி ஜே.சி.பி. இயந்திரங்கள் இயங்காது என ஜே.சி.பி. உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.