×

பாலக்காட்டில் 1000 பேருக்கு இலவச பட்டா வழங்கல்

பாலக்காடு, பிப்.19: பாலக்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் 1000 பேருக்கு இலவச நிலப்பட்டா வழங்கப்பட்டது. கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாலக்காடு மாவட்டத்தில் 5 தாலுகாவில் வசிக்கும் 1000 பேருக்கு இலவச நிலப்பட்டாவை வழங்கினார். இதைத்தொடர்ந்து, வெள்ளிநேழி, மன்னார்காடு கிராம அலுவலங்கள், நெம்மாரா, வல்லங்கி, நெல்லியாம்பதி, கோழிப்பதி, தரூர், எரிமையூர், திருவேங்கப்புரா ஆகிய கிராம அலுவலங்களின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் மிருண்மயி ஜோஷி சஷாங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Patta ,Palakkad ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி