×

400 பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள்

அந்தியூர், பிப். 19:   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகல் ஒரு ஊராட்சிக்குட்பட்ட  தொடக்கப்பள்ளியில் பெண்களுக்கு கோழி குஞ்சு வளர்ப்புக்கு வழங்கும் விழா நடந்தது. இதில் அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டு 400 பெண்களுக்கு தலா 25 அசீல் இன நாட்டுக்கோழிக் குஞ்சுகள் மற்றும் அதை பராமரிக்க ரூ.100 வழங்கினார். இதில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அய்யாசாமி, கால்நடை மருத்துவர் மோகனசுந்தரராஜ் மற்றும் உதவி கால்நடை மருத்துவர்கள், அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் சண்முகவேல், ஊராட்சி தலைவர் கண்ணம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : females ,
× RELATED தேர்தலில் போட்டியிடும்...