×

ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் குரும்பூரில் மெகா கோலப்போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பரிசு வழங்கினார்

திருச்செந்தூர், பிப். 19: குரும்பூரில் ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக. சார்பில் நடந்த மெகா கோலப்போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு  தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பரிசுகள் வழங்கினார்.
 ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர்  நவீன்குமார் தலைமையில் மெகா கோலப்போட்டி குரும்பூரில் நடந்தது. இதில் வெற்றிபெற்ற பெண்களுக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பரிசுகள்  வழங்கிப் பாராட்டினார். முதலிடம் வென்ற  தலைவன்வடலியை சேர்ந்த பிரவீணாக்கு ரூ.25 ஆயிரம், 2ம் இடம் வென்ற நாசரேத்தை சேர்ந்த பிரம்மசக்திக்கு ரூ.20 ஆயிரம், 3ம் இடம்பிடித்த ஆத்தூரைச் சேர்ந்த மஞ்சுவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், உடன்குடி ஒன்றியச் செயலாளர் பாலசிங், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர் பிரம்மசக்தி,  வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் கிங்ஸ்டன், ஒன்றிய துணை அமைப்பாளர் கோட்டூர் கோயில்துரை, மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெஸ்சி பொன்ராணி, விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கந்தசாமி,   விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் கல்லை சிந்தா, தொண்டர் அணி சுடலைமுத்து, ஊராட்சி செயலாளர் நட்டார் உள்ளிட்ட நிர்வாகிகள், என ஏராளமானோர் பங்கேற்றனர். வக்கீல் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

Tags : Anita Radhakrishnan MLA ,match ,Alvai Eastern Union DMK ,
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...