×

செய்தி துளிகள்...

* டிராக்டர் மோதி சிறுமி பலி: அய்யப்பன்தாங்கல் ராமதாஸ் நகரை சேர்ந்தவர்  ராஜேந்திர ஆதவ் (34), இந்திய கடலோர துணை கமாண்டர். இவரது மகள் ஆதிரா (2). நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர ஆதவின் தந்தை ரங்கநாதன், தாய் பரமேஸ்வரி ஆகியோர் ஆதிராவை அழைத்துக்கொண்டு, பைக்கில் செந்தூர்முருகன் கோயிலுக்கு புறப்பட்டனர். கோயில் அருகே சென்றபோது, பைக்கில் இருந்து ஆதிரா தவறி  விழுந்தாள்.  அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர்  சிறுமி மீது மோதியதில் சிறுமி உயிரிழந்தாள்.
* பழைய வண்ணாரப்பேட்டை பேராம்பாலு தெருவை சேர்ந்த நாராயணன் (35), நேற்று முன்தினம் மாலை கோவிலம்பாக்கம் அருகே பைக்கில் சென்றபோது, மாநகர பஸ் (த.எ.எம்14) மோதியதில் பலியானார்.
கஞ்சா விற்ற இன்ஜினியர் கைது: வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகம் மற்றும் ரயில் நிலையங்களில் கஞ்சா விற்ற வேப்பேரியை சேர்ந்த இன்ஜினியர் பிரணவ் குப்தா (24), பிரசாந்த் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
* ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மிற்கு நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், முடியாததால் ஏடிஎம் மிஷினின் பேட்டரி, மோடம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
* அதிமுக நிர்வாகி தற்கொலை: கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (44). ஜெயலலிதா பேரவையின் 145வது வட்ட துணை தலைவரான இவர், கடந்த 15ம் தேதி குடும்ப தகராறில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
நகை பறித்த சிறுவன் கைது: தேனாம்பேட்டை கணேசபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சரத்குமாரிடம் (25) கத்தி முனையில் 2 சவரன் செயின், செல்போனை பறித்துக் கொண்டு தப்பிய துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ஆன்ரூஸ் (20) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
* செல்போன் கடையில் கொள்ளை, ஓவியரை வெட்டி செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட புளியந்தோப்பை சேர்ந்த சூர்யா (19), பிரசன்னகுமார் (26), பெரம்பூர் ஹப்பரி (42) மற்றும் கொடுங்கையூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* செல்போன் பறிப்பு: அமைந்தகரையை சேர்ந்த பாட்ஷா (19), அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலக பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தபோது, ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.
1,240 கிலோ குட்கா பறிமுதல்: மாம்பலம் பகுதி கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த அம்பத்தூரை சேர்ந்த சாகனாராமை போலீசார் கைது செய்து, 1,240 கிலோ குட்கா மற்றும் ₹1.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
வாலிபர் போக்சோவில் கைது: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை காதலித்து, கடத்தி திருமணம் செய்த புளியந்தோப்பு ராமசாமி தெருவை சேர்ந்த அஸ்லாமை (32), போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* மண்டபத்தில் பாலியல் தொழில்: கொளத்தூர் 200 அடி சாலை ரெட்டேரி சந்திப்பு அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாலியல் தொழில் நடத்திய மேலாளர் நரேஷை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 இளம்பெண்களை மீட்டனர்.

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...