×

சாய்ந்த நிலையில் உள்ளது வாகன ஓட்டிகளை மிரட்டும் மின்கம்பம்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.18: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பெரிய கண்மாய் பாலத்தின் மூலம் செங்குடி வழியாக இளையான்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டோரத்தில், பெரிய கண்மாயில் உட்பகுதியில் கண்மாய் தண்ணீருக்குள் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின் கம்பம் இருபக்கமும் உள்ள மின் கம்பிகளின் இழு விசையிலே நின்று கொண்டுள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் கண்மாய் நீரில் சாய்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : motorists ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...