×

தாராபுரத்தில் சுட்டெரிக்கும் வெயில் ஏடிஎம் ஏசி அறைக்குள் சூட்டை தணிக்க தூங்கிய தெருநாய்

*பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அலறியடித்து ஓட்டம்

தாராபுரம் : தாராபுரத்தில் ஏடிஎம் ஏசி அறைக்குள் தெருநாய் படுத்திருந்ததால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம்-க்குள் பணம் எடுக்க சென்றார். சென்றவேகத்தில் அவர் அலறியடித்து ஓடி வந்தார்.

அவர், பதற்றத்துடன் வருவதை பார்த்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரிடம் விசாரித்தனர்.அப்போது, ஏடிஎம்-க்குள் தெருநாய் ஒன்று படுத்து தூங்கியது. நாயை பார்த்ததும் பயத்தில் வெளியே ஓடி வந்தேன் என கூறினார். தொடர்ந்து தெருநாய் படுத்திருந்ததை வீடியோ எடுத்த இளைஞர்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க ஏசி அறைக்குள் தெருநாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது என சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ தாராபுரம் பகுதியில் வைரலாகி வருகிகிறது.

Tags : Tarapuram ,Municipal Higher Secondary ,School ,Pollachi Road ,Tarapuram… ,
× RELATED புதிய வாக்காளராக சேர்வதற்கு 6.48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன