சென்னை அசோக்நகரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.77 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதால் நகைகளை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
