×

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலம், பிப்.17: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் மூட்டைகள் 160 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.  அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 51 பெட்டிகளில் ஏற்றினர்.
இதனைத்தொடர்ந்து நெல் அரவைக்காக சென்னை ராயபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா