×

மானூர் அருகே லோடு ஆட்டோ, கார் மோதி பாதயாத்திரை பக்தர்கள் உள்பட 4 பேர் படுகாயம்

மானூர், பிப்.17: வில்லிபுத்தூரைச் சேர்ந்த மின்ஊழியர் தமிழரசன்(28). சக்திஈஸ்வரன்(17), சண்முகவேல் ஆகியோர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். நேற்று நெல்லை-சங்கரன்கோவில் சாலையில் அழகியபாண்டியபுரம் சிற்றாற்று பாலம் அருகே வரும்போது குமரி மாவட்டம் சுசீந்திரம் பரப்புவிளையைச் சேர்ந்த சண்முகநாதன் மகன் ஆனந்த மணிகண்டன் ஓட்டி வந்த லோடு ஆட்டோ மோதி 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி(49). நேற்று முன்தினம்மொபட்டில் சென்றபோது கடையநல்லூர், கோவநல்லூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த சந்திரமோகன்(33) ஓட்டி வந்த
கார், மொபட் மீது மோதியதில் படுகாயமடைந்த கந்தசாமி நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மானூர் எஸ்.ஐ சையத்நிசார் அகமத் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : pilgrims ,Manor ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்