போச்சம்பள்ளி, பிப்.17: போச்சம்பள்ளி வட்டம், பண்ணந்தூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வேடியப்பன், முனியப்பன் சுவாமி கோயில் விழா 3 ஆண்டுக்கு ஒருமுறை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருவிழா நடைபெற்றது. காலை முதலே சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.
இதனையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், கோயில் வளாகத்திலேயே கறியை பங்கு போட்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கறி விருந்து வழங்கினர்.