×

மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க முடிவு

கோவை, பிப். 17: கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சரவணம்பட்டியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் தலைமை தாங்கினார். இதில், கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 19ம் தேதி (வெள்ளி) காலை 8 மணிக்கு நடக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார கூட்டத்தில், மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில், மாவட்ட தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக - ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், கழக அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தேர்தல் பரப்புரை வாகனங்களை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Tags : campaign ,MK Stalin ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...