×

போதையில் கடும் ரகளை ஊர்க்காவல் படை வீரர்கள் கைது

புழல்: புழல் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராகுல் (22). இவரது தம்பி முரளி (19). இவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள். அதே பகுதியை சேர்ந்தவர் ராகுலின் நண்பர் ராமு (24). நேற்று முன்தினம் மாலை, மது போதையில் இருந்த ராமு, அதே பகுதியை சேர்ந்தவரும், புழல் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரருமான கவுதமுடன் (26) தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கவுதம், ராமுவை உருட்டைகட்டையால் பலமாக தாக்கியுள்ளார். இதில், அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு ராகுல், முரளி, கார்த்திக் ஆகிய மூவரும், ஊர்க்காவல் படை வீரர் கவுதமிடம் இது தொடர்பாக தகராறு செய்தனர். அப்போது, அங்கு போதையில் இருந்த சக ஊர்க்காவல் படை வீரர்கள் சரத் (28), அருண் (26), ஜெயா பிரசாந்த் (28), சதீஷ் (26) ஆகியோருடன் சேர்ந்து, இரும்பு ராடால் தாக்கியதில், ராகுல், முரளி படுகாயமடைந்தனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல் படையை சார்ந்த சரத், கவுதம், அருண், ஜெயபிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான சதீஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : rioters ,
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...