×

எருமப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு கலெக்டர் தொடங்கி வைக்கிறார்

சேந்தமங்கலம், பிப்.16: எருமப்பட்டியில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை கலெக்டர் துவக்கி வைக்கிறார். சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி பொன்னேரியில், இன்று(16ம் தேதி) காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜல்லிக்கட்டை காலை 8 மணிக்கு கலெக்டர் மெகராஜ்,  சின்ராஜ் எம்பி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். முன்னதாக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை நாமக்கல் ஆர்டிஓ கோட்டை குமார், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி மற்றும் வருவாய் துறையினர் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடித்து விடவேண்டும் என ஜல்லிக்கட்டு குழுவினருக்கு உத்தரவிட்டனர்.

Tags : Jallikattu Collector ,Erumappatti ,
× RELATED எருமப்பட்டி வட்டாரத்தில் உலக மண்வள நாள் விழிப்புணர்வு கூட்டம்