- சின்னமாரியம்மன் கோவில் திருவிழா
- மல்லசமுத்திரம்
- பங்கூனி விழா
- சின்னமாரியம்மன் கோயில்
- வடக்கு ரத வீதி மஜித்
மல்லசமுத்திரம், மார்ச் 20: மல்லசமுத்திரம் சின்னமாரியம்மன் கோயிலில், பங்குனி திருவிழா நேற்று தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், வடக்கு ரத வீதி மஜித் அருகில் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்து, பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் பூசாரி சுமந்தபடி கோயிலுக்கு வந்தார். நேற்று இரவு 9 மணியளவில், கம்பம் நடும் விழா நடந்தது. தொடர்ந்து, மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
