×

புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

மயிலாடுதுறை, பிப். 12: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு பிறகு வகுப்புகளை புறக்கணித்து விட்டு மாணவர்கள் வெளியேறினர்.

Tags :
× RELATED செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்