×

சிங்காரவேலர் நினைவு தினம் அனுசரிப்பு

காரைக்கால், பிப். 12: மீனவர் குலத்தில் பிறந்து தொழிலாளர்களுக்காக போராடியவரும், மே தினத்தை உருவாக்கியவருமான சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 75வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள சிங்காரவேலர் வெண்கல சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் எம்எல்ஏ கீதா ஆனந்தன், துணை ஆட்சியர் பாஸ்கர், காவல் கண்காணிப்பாளர் வீரவல்லபன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்தனர். மீனவர்கள் சார்பில் காங்கிரஸ் மீனவரணி தலைவர் அரசன் மற்றும் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, காசாகுடிமேடு உள்ளிட்ட 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது மத்திய அரசின் தேசிய மீன்வள மசோதா 2020ஐ திரும்ப பெற வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தினர்.

Tags : Singaravelar Memorial Day ,
× RELATED காரைக்காலில் சிங்காரவேலர் நினைவு...