காரைக்கால், பிப்.12: சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 173வது நினைவு தினத்தையொட்டி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு, புதுச்சேரி முதல்வர், அமைச்சர், மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 173வது நினைவு தினம் காரைக்காலில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதுசமயம், காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலைக்கு, அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவகொழுந்து, முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் பலர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை
செய்தனர்.