×

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்காக மதியம் வரை காத்திருக்க பாஜக முடிவு என தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்காக மதியம் வரை காத்திருக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவித்துள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் தொடர புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிடுவது எனத் தொகுதி உடன்பாடு எட்டியது. இதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இறுதி செய்வதற்காக தனியார் விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமிக்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா நேற்று இரவு காத்திருந்தார்.

ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையிலான ஐவர் குழு, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் தொடர வேண்டுமானால் லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணிக்குள் சேர்க்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோருடன் மன்சுக் மாண்டவியா சுமார் ஒரு மணிநேரம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்காக இன்று மீண்டும் மதியம் வரை காத்திருக்க பாஜக முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் எத்தனை தொகுதி, இல்லையென்றால் எத்தனை தொகுதி என தனித்தனியாக பட்டியலிடுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்து வருகின்றார். என்.ஆர்.காங்கிரஸ் இல்லாமல் பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Tags : Puducherry R. ,BJP ,Congress ,Puducherry ,Puducherry N. R. ,N. D. A. ,Rangasami ,
× RELATED விருப்பமனு அளித்தவர்களிடம் திமுகவில்...