×

ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி இன்று பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொள்ளாச்சி: ரம்ஜான் பண்டிகை நெருங்குவதையொட்டி இன்று பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனையாகின. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் உள்ள மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள் அதிகளவு கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் வரத்து ஓரளவு இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், தொடர்ந்து மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது.

அதன்பின் கடந்த இரண்டாவது வாரத்திலிருந்து புனிதவெள்ளி நோன்பு மற்றும் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பால் மாடு வரத்து குறைவாக இருந்ததுடன் கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவால், விற்பனை மந்தமானது. இதனால், சில வாரங்களாக உள்ளூர் பகுதி வியாபாரிகளே, மாடுகளை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர்.இந்நிலையில், இன்று நடைபெற்ற சந்தைக்கு ஆந்திர மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து குறைவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

வரும் 22ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால், இன்று சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகையும் அதிகமாக இருந்து. இதனால் சில வாரத்திற்கு பிறகு மாடுகள் விற்பனை மீண்டும் விறுவிறுப்பானதுடன், அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு, விற்பனையானது. இதில் எருமை மாடு ரூ.55ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.40ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.60ஆயிரம் வரையிலும், ஆந்திர காளைமாடு ரூ.75ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.20ஆயிரத்துக்கும் கூடுதலாக விற்பனையானது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரையிலே மாடு வியாபாரம் இருந்தது. ஆனால் இன்று ரூ.3 கோடி வரை மாடு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ramzan ,Pollachi market ,Pollachi ,Ramzan festival ,Gandhi Market ,Pollachi, Coimbatore district ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...