விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. மாணவியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது; வழக்கு விசாரணைக்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.
