×

சித்தாமூர் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு: தீர்மானம் நிறைவேற்றம்

செய்யூர்: செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் பொதுமக்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் பேரவை சந்திப்பு கூட்டம் நடந்தது. முன்னாள் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். பேரவை தலைவர் கோபுராஜ் முன்னிலை வகித்தார். சூனாம்பேடு ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுசேதா வரவேற்றார்.

சூனாம்பேடு பள்ளி முன்னாள் மாணவர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சூனாம்பேடு சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு, வரும் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் நினைவுத்தூண், நினைவு கல்வெட்டு அமைப்பது. சூனாம்பேடு பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த, அரசு சார்பில் தொழிற்சாலைகள், அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்.

43 ஊராட்சிகளை கொண்ட சித்தாமூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் 14ம் தேதி நடக்கவுள்ள வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்பில், படித்து முடித்த அனைத்து இளைஞர்களும் இளம்பெண்களும் கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது.

Tags : Siddamoor Union ,
× RELATED சித்தாமூர் ஒன்றியம் இரண்டாக பிரிப்பு: தீர்மானம் நிறைவேற்றம்