கரூர், மார்ச். 14: கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் விவசாய பணிகளுக்கு என பம்ப் செட்டுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாய பணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்திட அரசின் இலவச மின்சாரம் மூலம் பம்பு செட்டுகளின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்த்து வருகின்றனர். இந்த விவசாய பணிகளுக்கு பெரும்பாலும் அதிகாலை வேலையிலும், மாலை மற்றும் இரவு நேரத்திலும் மின்மோட்டாரை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்
