நாகர்கோவில், பிப். 11: நாகர்கோவில் கோணத்தில் உள்ள குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் ெதாழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (பிப்.12) காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வந்து, தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு ெசய்ய உள்ளனர். எனவே 10, 12, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதியுடைய பதிவுதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களின் பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. ேமலும் முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் 9499055932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.