×

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம்

ஊட்டி, பிப்.11: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 90 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகள் சார்பில் ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் பிரச்சார கூட்டம் நேற்று நடந்தது.  ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விவேக், மாநில செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை முடிவு கொண்டு வர மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர். இதில், வட்டார தலைவர்கள் நேரு, உயிலட்டி ராமசந்திரன், நகர தலைவர் கெம்பைய்யா மற்றும் பீமராஜ், ராஜேஷ்வரி பாபு, இமாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,party campaign ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...