போடி, பிப்.11: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் போடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் போடி காமராஜர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும், போடி நகராட்சி முன்னாள் நகர்மன்ற தலைவர் சுருளிமணி நினைவு கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதன்பிறகு சுருளிமணியின் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், நகரச் செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.