×

போலீசார் தாக்கியதாக கமிஷனரிடம் மனு

மதுரை, பிப். 11: மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி (25). தற்காலிக கொரோனா தடுப்பு பணியாளர். இவரை ஒரு வழக்கு விசாரணைக்காக ஜெய்ஹிந்துபுரம் போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஒரு எஸ்ஐ மற்றும் 4 போலீசார் திருப்பதியை கடுமையாக தாக்கியதாகவும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் திருப்பதிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட திருப்பதியின் குடும்பத்தினர் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.

Tags : Commissioner ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...