×

ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 9வது நாளாக மறியல் 70க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல், பிப்.11: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர் சிறை நிரப்பும் போராட்டம் 9வது நாளாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர்  மாவட்ட செயலாளர் பாலாஜி மறியலை துவக்கி வைத்து பேசினார். போராட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 21 மாதகால பணப்பலன்கள்  நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் என்பன உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கிளம்பி  பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில்  பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர்  கைது செய்தனர்.

Tags : servants ,protest ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து