×

திருவாரூரில் சீட் பெல்ட் அணிவதை வலியுறுத்தி கார் பேரணி

திருவாரூர், பிப்.11: சீட் பெல்ட் அணிவதை வலியுறுத்தி திருவாரூரில் நடைபெற்ற கார் விழிப்புணர்வு பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி துவக்கி வைத்தார். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் இந்த நிகழ்ச்சியானது ஒருவார காலத்திற்கு பதில் ஒரு மாத காலத்திற்கு நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கடந்த மாதம் 17ம் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி விபத்து ஏற்படும்போது உயிர் பிழைக்கும் வகையில் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கார் பேரணியானது நடைபெற்றது. அதனை புதிய ரயில் நிலையத்திலிருந்து வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி துவக்கி வைத்தார்.

இதில் ஆய்வாளர்கள் சண்முகவேல், கருப்பண்ணன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், கார் டீலர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய இந்த கார் பேரணியானது தஞ்சை சாலை, விளமல், கலெக்டர் அலுவலகம் வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது.

Tags : Car rally ,Thiruvarur ,
× RELATED திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்...