டெல்லியில் இருந்து கோவா சென்ற AKASA AIR விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மற்றும் நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்தில் பீடி, லைட்டருடன் பயணி ஒருவர் விமானத்தில் ஏறியுள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது.
