×

தேர்தல் நெருங்குவதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 23 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவு

சிவகங்கை, பிப்.10: சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் 23 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள விவரம் வருமாறு: சிவகங்கை குடிமைபொருள் தனி தாசில்தாராக பணிபுரியும் தர்மலிங்கம் சிவகங்கை தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இப்பணியிடத்தில் உள்ள மைலாவதி குடிமைப்பொருள் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். சிங்கம்புணரி தாசில்தாராக உள்ள திருநாவுக்கரசு இளையான்குடி தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் ரமேஷ் சிவகங்கை தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். திருப்பத்தூரில் தேசிய நில எடுப்பு பிரிவில் தாசில்தாராக பணிபுரியும் மாணிக்கவாசகம், மானாமதுரை தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இப்பணியிடத்தில் பணிபுரிந்த பஞ்சாபகேசன், சிவகங்கை சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். திருப்பத்தூரில் மாநில நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாராக பணிபுரியும் ரெத்தினவேல் பாண்டியன், திருப்புவனம் தாசில்தாராக மாற்றப்பட்டார்.    

சிவகங்கை சிப்காட் நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாராக பணிபுரியும் ராஜரெத்தினம், தேவகோட்டை தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் சேகர் திருப்பாத்துரில் மாநில நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். காரைக்குடி குடிமை பொருள் தனி தாசில்தார் அந்தோணிராஜ், திருப்பத்துர் தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் ஜெயலெட்சுமி, திருப்பத்துர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.    

சிவகங்கையில் கோட்ட ஆய அலுவலராக பணிபுரியும் ஆனந்த் காரைக்குடி தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் ஜெயந்தி சிங்கம்புணரி தாசில்தாராக மாற்றப்பட்டார். சிவகங்கை கலெக்டர் அலுவலக மேலாளராக பணிபுரியும் கயல்செல்வி, சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் பாலகிருஷ்ணன், காரைக்குடி குடிமை பொருள் தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். சிவகங்கை தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்த கந்தசாமி, கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் மேசியாதாஸ் கலெக்டர் அலுவலக மேலாளராக மாற்றப்பட்டார். காளையார்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரியும் மகேஸ்வரன், சிவகங்கை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் ராஜா, தேவகோட்டை ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டார்.
    
தேவகோட்டை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக உள்ள கண்ணன், காளையார்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டார். தேவகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக உள்ள பாலாஜி, தேவகோட்டை ஆர்டிஓ நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டார். விருதுநகரில் முத்திரைத்தாள் தனி தாசில்தாராக பணிபுரியும் சிவசம்போ, தேவகோட்டை கோட்ட ஆய அலுவலராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரியும் சேதுநம்பு சிவகங்கை கோட்ட ஆய அலுவலராக மாற்றப்பட்டார். மதுரை 10.2.2021 சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Collector Madhusudhanreddy ,Dashildars ,election ,Sivagangai district ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...