×

ஆட்டோ மோதியதில் தலைமையாசிரியர் பலி

திருப்புத்தூர், பிப்.10: திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் ஆட்டோ மோதியதில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உயிரிழந்தார்.    திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர் காளிமுத்து(71). இவர் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் கண்டரமாணிக்கத்தில் இருந்து திருப்புத்தூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது இவரது பின்னே வந்த ஆட்டோ அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த காளிமுத்துவை சிகிச்சைகாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.    இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

Tags : Editor-in-Chief ,
× RELATED முதியவர் பலி தலைமையாசிரியருக்கு பெரியண்ணன் அரசு வாழ்த்து