மதுரை உத்தங்குடி இலந்தைக்குளத்தை சேர்ந்தவர் கௌரிசங்கர் (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பாத்திரங்கள், டி.வியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. கௌரிசங்கர் புகாரில் புதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.